சென்னைக்கு குறி வைத்த தீவிரவாதி முகமது ஹூசைனை நாடு கடத்த மறுத்து வரும் இலங்கை!!
சென்னை: சென்னையில் தூதரகங்களை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய தீவிரவாதி முகமது ஹூசைனை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாமல் இலங்கை தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது.
சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களில் தூதரகங்கள் உட்பட முக்கிய இடங்களைத் தகர்க்க சதித் திட்டம் தீட்டியதாக இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதி ஜாகிர் உசேன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி சித்திக்தான் தம்மை அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் அளித்தான் ஜாகிர் உசேன்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ன் கட்டளைப்படி தூதரக அதிகாரி சித்திக், ஜாகிர் உசேனை சென்னைக்குள் ஊடுருவ அனுப்பி வைத்ததும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து சிவபாலன், முகமது சலீம் ஆகிய தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்த தீவிரவாதிகளிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சதித் திட்டத்தில் மலேசியாவில் பதுங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ஹூசைனுக்கும் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முகமது ஹூசைனை கைது செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.
இந்த நிலையில் முகமது ஹூசைனை இலங்கைக்கு மலேசியா நாடு கடத்தியது. இலங்கைக்கு முகமது ஹூசைன் நாடு கடத்தப்பட்டது முதல் தங்களிடம் அவனை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது. ஆனால் இலங்கையோ, இன்னமும் விசாரணை நடைபெறுகிறது என்று கூறி இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை உட்பட தென்னிந்திய நகரங்களின் முக்கிய இடங்களைத் தகர்க்கும் சதித் திட்டத்துக்கான நிதியை இதர தீவிரவாதிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவன் முகமது ஹூசைன் என்பதால் அவனிடம் விசாரணை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இருக்கின்றனர்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications