சென்னைக்கு குறி வைத்த தீவிரவாதி முகமது ஹூசைனை நாடு கடத்த மறுத்து வரும் இலங்கை!!
சென்னை: சென்னையில் தூதரகங்களை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய தீவிரவாதி முகமது ஹூசைனை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாமல் இலங்கை தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது.
சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களில் தூதரகங்கள் உட்பட முக்கிய இடங்களைத் தகர்க்க சதித் திட்டம் தீட்டியதாக இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதி ஜாகிர் உசேன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி சித்திக்தான் தம்மை அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் அளித்தான் ஜாகிர் உசேன்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ன் கட்டளைப்படி தூதரக அதிகாரி சித்திக், ஜாகிர் உசேனை சென்னைக்குள் ஊடுருவ அனுப்பி வைத்ததும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து சிவபாலன், முகமது சலீம் ஆகிய தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்த தீவிரவாதிகளிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சதித் திட்டத்தில் மலேசியாவில் பதுங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ஹூசைனுக்கும் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முகமது ஹூசைனை கைது செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.
இந்த நிலையில் முகமது ஹூசைனை இலங்கைக்கு மலேசியா நாடு கடத்தியது. இலங்கைக்கு முகமது ஹூசைன் நாடு கடத்தப்பட்டது முதல் தங்களிடம் அவனை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது. ஆனால் இலங்கையோ, இன்னமும் விசாரணை நடைபெறுகிறது என்று கூறி இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை உட்பட தென்னிந்திய நகரங்களின் முக்கிய இடங்களைத் தகர்க்கும் சதித் திட்டத்துக்கான நிதியை இதர தீவிரவாதிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவன் முகமது ஹூசைன் என்பதால் அவனிடம் விசாரணை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இருக்கின்றனர்
-
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications