பகலில் மாறி மாறிதான் இருக்கும்.. இரவில் நல்ல மழையை எதிர்ப்பார்க்கலாம்.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னையில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை: இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியது.

ஆனால் நேற்றிரவு முதல் சென்னையில் மழை ஓய்ந்துள்ளது. இன்று காலை முதலே விட்டு விட்டு வெயில் காய்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று க்ளைமேட் வெயில், சாரல், தூறல், மேகமூட்டம் என மாறி மாறிதான் இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேற்று போலவே இன்றும் பல இடங்களில் தூறல் மழை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் 5 நிமிடங்களில் மழை விட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில இடங்களில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மழை நீடிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று இரவு மற்றும் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications