இதுக்காகத்தான் காத்திருந்தோம்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற சேரன் அன்ட் கோ!
விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தங்களின் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடுவதாக சேரன் அன்ட் கோ தெரிவித்துள்ளது.
சென்னை: விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தங்களின் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடுவதாக சேரன் அன்ட் கோ தெரிவித்துள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் விலக வேண்டும் என இயக்குநர் சேரன் போர்க்கொடி தூக்கினார்.
அவருக்கு ராதாரவி, ராதிகா, டி ராஜேந்தர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்றது.

சேரன் போராட்டம் வாபஸ்
இந்நிலையில் ஆர்கே நகரில் போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சேரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எங்களுக்கு கிடைத்த வெற்றி
விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர்கள் கூறினர். அப்போது பேசிய சேரன், விஷாலின் கடிதத்திற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை என தெரிவித்தார்.

விளம்பரத்திற்கு ஆசைப்படுவது யார்?
அனுபவமின்மையும் அவசரமும்தான் விஷாலுக்கு வீழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறினார். விளம்பரத்திற்கு ஆசைப்படுவது யார் என மக்களுக்கு தெரியும் என்றும் சேரன் கூறினார்.

விஷாலை யாருக்குமே தெரியாது
பொதுக்குழுவில் தங்களின் கோரிக்கைகள் குறித்து தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் பேசுவோம் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தாங்கள் இருவரும் நடந்து சென்றால் விஷாலை யாருக்குமே தெரியாது என்றும் சேரன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications