தமிழக செஸ் வீரர்களுக்கான சிறப்பு போட்டிகள்... பதிவு செய்ய பிரத்யேக இணையதளம் உருவாக்கம்
தமிழக சதுரங்க விளையாட்டு வீரர்களுக்காக சிறப்புப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய பிரத்யேக இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக சதுரங்க விளையாட்டு வீரர்களுக்காக சிறப்புப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
'http://www.easypaychess.com' என்ற அந்த இணையத்தளத்தில் தமிழகம் முழுக்க உள்ள செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் பதிவு செய்து அதற்கென உள்ள கட்டணத்தையும் செலுத்தி, போட்டிகளில் பங்கேற்கலாம்.

இது குறித்து, போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், " செஸ் போட்டிகளில் பங்கேற்போருக்கு பதிவுக் கட்டணம் ரூ.150 முதல் ரூ.3000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவுக் கட்டணம் அதிகரிக்க அதிகரிக்க, பரிசுத் தொகையும் ரூ. 22 ஆயிரம் முதல், ரூ. 6 லட்சம் வரையில் அதிகமாக கிடைக்கும்.
செஸ் விளையாட்டுப் போட்டிகள் பெரியவர்களுக்கு மட்டும்தான் நடத்தப்படும் என்றில்லை. பள்ளி மாணவர்களுக்கும் வயது அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான செஸ் போட்டிகள் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் அதிகம் நடைபெறும். அதில் ஒரு போட்டியாக சென்னை பம்மலில் தட்சிணாமூர்த்தி நினைவு செஸ் போட்டிகள் இந்த மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தப்போட்டி நடைபெறும் முகவரி:
செஸ் போட்டிகள் 2017, மாஸ்டர் மைண்ட் அகாதெமி, ஸ்ரீ கணேஷ் திருமண மண்டபம், பொழிச்சலூர் மெய்யின் ரோடு, பம்மல், சென்னை.
இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.2 லட்சம். TNSCAல் பதிவு செய்துள்ள விளையாட்டு வீரர்கள் தங்களின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பதிவு செய்த விண்ணப்ப படிவம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்" என்று தெரிவித்தனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications