சிதம்பரம் இரட்டை கொலை வெளியூர் கூலிப்படையின் வெறிச் செயல்: விசாரணையில் திடுக் தகவல்
சிதம்பரம்: சிதம்பரத்தில் வீடு புகுந்து அண்ணன், தம்பியின் தலையை துண்டித்து கொன்ற வழக்கில் 4 பேர் சரண் அடைந்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேட்டைச் சேரர்ந்தவர்க்ள் ஆம்புலன்ஸ் குமார்(34), அவரது தம்பி ராஜேஷ்(32). விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள். கடந்த 2ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மர்ம கும்பல் ஒன்று பைக்குகளில் அங்கு வந்து வீடு புகுந்து குமார் மற்றும் ராஜேஷை வெட்டிக் கொலை செய்தது. அந்த கும்பல் அவர்களின் தலையை வெட்டி அருகில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் வைத்துவிட்டு சென்றது.
அந்த கும்பல் வெடிகுண்டுகளை வேறு வீசிவிட்டுச் சென்றது. இந்த குண்டுவீச்சில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே குமாருக்கும் பிரபல ரவுடி மண்ரோடு சந்திரனின் தம்பி ஹரிக்கும் ஏற்பட்ட முன்விரோதம் தான் இந்த இரட்டை கொலைக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஹரியின் கூட்டாளிகளான அண்ணாமலைநகர் மண்ரோட்டை சேர்ந்த கஜேந்திரன்(29), அண்ணாமலைநகர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த பட்டாபி என்கிற பட்டாபிராமன்(25), அவரது தம்பியான சிவபுரி தென்பாதியை சேர்ந்த மணி என்கிற சிவமணி(24), ராஜா முத்தையா செட்டியார் மருத்துவமனை ரோட்டை சேர்ந்த பத்தாயிரம் என்கிற வெங்கடேசன்(30) ஆகியோர் போலீசில் புதன்கிழமை சரண் அடைந்தனர்.
அவர்கள் நான்கு பேரும் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக அவர்கள் விசாரணையில் கூறுகையில்,
நாங்கள் குமார் மற்றும் அவரது தம்பியை கொலை செய்யவில்லை. வெளியூரில் இருந்து ரவுடி கும்பல்களை வரவழைத்து தான் செய்தோம். வெளியூர் கூலிப்படையினருக்கு குமாரின் வீட்டை காட்ட தான் நாங்கள் அங்கு சென்றோம். தூத்துக்குடி மாற்றம் நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து ரவுடிகள் வரவழைக்கப்பட்டனர் என்றனர்.












Click it and Unblock the Notifications