சென்னை-பெங்களூர்- மைசூர் ரயில் திட்ட ஒத்துழைப்பு உட்பட சீனாவுடன் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
சென்னை: சென்னை- பெங்களூர்- மைசூர் நகரங்களை இணைக்கும் விரைவு ரயில் திட்டத்துக்கான ஒத்துழைப்பு உட்பட சீனாவுடன் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக சீன அதிபர் ஜின்பிங் வருகை தந்துள்ளார். முதல் நாளான நேற்று குஜராத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் முன்னிலையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குஜராத் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஜின்பிங் தம்பதியர், டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இதே போன்று பிரதமர் நரேந்திர மோடியும் தனி விமானத்தில் டெல்லி சென்றார்.

டெல்லியில் ஜின்பிங்
டெல்லியில் இன்று ஜனாதிபதி மாளிகையில் சீன அதிபருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர்.

பிரதமருடன் சந்திப்பு
இதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங்- வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடைபெற்றது. அதன்பிறகு ஹைதராபாத் இல்லத்தில் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது.

பேச்சுவார்த்தை- ஒப்பந்தங்கள்
இந்த சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது. பேச்சு வார்த்தைக்கு பிறகு இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா - சீனா இடையே வர்த்தக மேம்பாடு, கலாச்சார பரிமாற்றங்கள், ரயில்வே துறையில் ஒத்துழைப்பை நீட்டிப்பது உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சென்னை- பெங்களூர்- மைசூர் ரயில் திட்டம்
ரயில்வே துறையில் சீன ஒத்துழைப்பு தொடர்பாக மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்து. இதில் சென்னை- பெங்களூர்- மைசூர் நகரங்களை அதிவிரைவு ரயில் திட்டம் மூலம் இணைப்பதும் அடங்கும்.

மானசரோவருக்கு புதிய பாதை
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா மற்றும் சீன வர்த்தக அமைச்சர் ஒப்பந்தங்களை பரிமாற்றிக் கொண்டனர். மேலும் மானசரோவருக்கு சிக்கிம் வழியா செல்லவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications