சென்னை-பெங்களூர்- மைசூர் ரயில் திட்ட ஒத்துழைப்பு உட்பட சீனாவுடன் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
சென்னை: சென்னை- பெங்களூர்- மைசூர் நகரங்களை இணைக்கும் விரைவு ரயில் திட்டத்துக்கான ஒத்துழைப்பு உட்பட சீனாவுடன் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக சீன அதிபர் ஜின்பிங் வருகை தந்துள்ளார். முதல் நாளான நேற்று குஜராத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் முன்னிலையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குஜராத் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஜின்பிங் தம்பதியர், டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இதே போன்று பிரதமர் நரேந்திர மோடியும் தனி விமானத்தில் டெல்லி சென்றார்.

டெல்லியில் ஜின்பிங்
டெல்லியில் இன்று ஜனாதிபதி மாளிகையில் சீன அதிபருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர்.

பிரதமருடன் சந்திப்பு
இதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங்- வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடைபெற்றது. அதன்பிறகு ஹைதராபாத் இல்லத்தில் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது.

பேச்சுவார்த்தை- ஒப்பந்தங்கள்
இந்த சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது. பேச்சு வார்த்தைக்கு பிறகு இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா - சீனா இடையே வர்த்தக மேம்பாடு, கலாச்சார பரிமாற்றங்கள், ரயில்வே துறையில் ஒத்துழைப்பை நீட்டிப்பது உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சென்னை- பெங்களூர்- மைசூர் ரயில் திட்டம்
ரயில்வே துறையில் சீன ஒத்துழைப்பு தொடர்பாக மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்து. இதில் சென்னை- பெங்களூர்- மைசூர் நகரங்களை அதிவிரைவு ரயில் திட்டம் மூலம் இணைப்பதும் அடங்கும்.

மானசரோவருக்கு புதிய பாதை
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா மற்றும் சீன வர்த்தக அமைச்சர் ஒப்பந்தங்களை பரிமாற்றிக் கொண்டனர். மேலும் மானசரோவருக்கு சிக்கிம் வழியா செல்லவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications