For Daily Alerts
Just In
பத்திரிக்கையாளர் சோ கவலைக்கிடம்.. டாக்டர்கள் தீவிர சிகிச்சை
சென்னை: மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ எஸ் ராமசாமியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார் சோ. சில வாரங்களுக்கு முன்பு கூட அவர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார். இந்த நிலையில், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்படவோ அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை தற்போது மோசமடைந்துள்ளது.
English summary
Veteran actor and senior journalist Cho Ramaswamy's health condition is deteriorating, say sources.
Story first published: Thursday, January 22, 2015, 18:03 [IST]