வாவ்.. சென்னையின் முதல் அடுக்குமாடி பஸ் ஸ்டாண்ட்.. மாதவரத்தில் ரூ. 95 கோடியில்!
மாதவரத்தில் சுமார் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
Recommended Video

சென்னை: மாதவரத்தில் சுமார் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சிஎம்டிஏ மாதவரம் ரவுண்டானா அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ 95 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி வசதியுடன் பேருந்துகள் நிறுத்துவதற்கு புதிய புறநகர் பேருந்து நிலையத்தை கட்டியுள்ளனர்.

இந்த பஸ் நிலையத்தில் தரை தளத்தில் 51 பேருந்துகளும் மேல்தளத்தில் 50 பேருந்துகளும் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 மாநகரப் பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, ஹைதராபாத், தெலுங்கானா ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகிறது. மேலும் பயணிகள் வசதிக்காக தங்கும் வசதியும் கழிப்பிட வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications