பீனிக்ஸ் பறவையாய் பிறப்பெடுக்கக் காத்திருக்கும் எங்கள் பேரறிவுத் தாயே! கவிதை பாடிய ஓ.பி.எஸ்
சென்னை: மன்னர்களை கவிதை பாடி வாழ்த்துவது அந்தக்காலம். இப்போதோ மாநில முதல்வரே சட்டமன்றத்தில் கவிதை பாடி கட்சித்தலைவியை வாழ்த்துக்காலம் ஆகிவிட்டது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார்.

அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி புகழ் மாலை சூட்டி கவிதை பாடினார். உணர்ச்சிப்பிழம்பாக அவர்பாடிய கவிதையை படியுங்களேன்.
ஆறாம் முறை கழகத்தை ஆட்சித்
தேர்தனில் அமர்த்தி,
சூதுமதி, சூழ்ச்சிதனை
சுக்குநூறாய் நொறுக்கி,
தருமமே வெல்லும்,
பீனிக்ஸ் பறவையாய் பிறப்பெடுக்கக்
காத்திருக்கும் எங்கள் பேரறிவுத் தாயே !...
விழிப்புற்ற தமிழகத்திற்கு
விடையாக வந்த விடிவெள்ளியே !...
தங்கம் தருகிற கை எங்கள்
தங்கத் தாரகை என தாய்க்குலம் போற்றுகிற
சக்தியின் வடிவே !
சேற்றிலே பாடுபட்டு செந்நெல் விளைவிக்கிற
ஏற்றமிகு விவசாயிகள் வாழ்விலே
மாற்றத்தை உருவாக்க
காவேரியை மீட்டு வந்த கம்பீரமே !
முல்லை பெரியாறு காத்திட்ட
மூவேந்தர் ஓர் உருவே !.....
தடம் மாறிக் கிடந்த தலைமுறைக்கு
சரியான வழிகாட்டி,
சாதிக்கும் திறம் கூட்டி,
மதி செழிக்க மடிக்கணினி தந்த
மகராசியே !...
ஆற்றல்களின் பிரம்மமே !....
என்று கவிதை பாடினார் பன்னீர் செல்வம்.
கடந்த முறை குலசாமியே, தன்மானச்சிங்கமே என்று கவிதை பாடியவர் இம்முறை அதைவிட ஒருபடி மேலே போய் கவிதை வாசித்துள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications