நாளிதழ்களில் இன்று: முதல்வரா? எதிர்க்கட்சி தலைவரா? - ரசிகர்களுக்கு கமல் ஹாசன் பதில்
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்து (தமிழ்)
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், யூ-டியூப் மூலம் நேரலையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்தார். அப்போது, சமூக குறைபாடுகளை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக விரைவில் 'மய்யம் விசில் ஆஃப்' (செல்போன் செயலி) அறிமுகப்படுத்தப்படும் என்று கமல் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த தேர்தலில் தான் முதல்வராக இருப்பேனா அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பேனா என்று மக்கள் கேட்பதாகவும், ஆனால், அதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டுமென்றும் நேரலையில் பேசிய கமல் ஹாசன் கூறியதாக ’தி இந்து’ தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கத்துவா சம்பவத்தில் பாஜகவின் நிலைப்பாடுதான் என்ன? என்ற தலைப்பில் இன்று தலையங்கம் வெளியிட்டுள்ளது ’தி இந்து’ தமிழ். "காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரட்டை நாக்குடன் பேசிவருகிறது பாஜக. இவ்விவகாரத்தில் ஜம்மு பகுதியில் பாஜக காட்டும் முகமும் தேச மக்களுக்குக் காட்டும் முகமும் ஒன்றுக்கொன்று முரணானவை. பிரதமர் என்பதைத் தாண்டி பாஜக கூட்டணி ஆளும் மாநிலம் என்ற வகையிலும் கூடுதல் பொறுப்பு இந்த விஷயத்தில் மோடிக்கு இருக்கிறது. நடவடிக்கைகளை சொந்தக் கட்சியிலிருந்து அவர் தொடங்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி
இஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவுக்கு ஆண்டுதோறும் உலக முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயணத்துக்கு இந்தியர்களுக்கான ஒதுக்கீடு சுதந்திரத்துக்குப்பின் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு 1.75 லட்சம் பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்றபின் நான்காவது முறையாக இரண்டு நாள் பயணமாக வரும் 27 ஆம் தேதி சீனா செல்கிறார். இந்திய-சீன எல்லையில் அவ்வப்போது பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன அதிபரின் அழைப்பின் பேரில் இந்த சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர்
போராட்டங்களில் பங்கேற்கும் பலர் பணம் கொடுத்து திரட்டப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மையமாக வைத்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தினமலர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தால் மரண தண்டனை அளிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்திருத்தத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று கையெழுத்திட்டதை தொடர்ந்து அச்சட்டமானது உடனடியாக அமலுக்கு வந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் மட்டும் நாடுமுழுவதும் 12 வயதிற்குட்பட்ட குறைந்தது பத்து சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்.
பிற செய்திகள்:
- ஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல், 57 பேர் பலி
- இராமநாதபுரம்: ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள்
- அமெரிக்கா: நிர்வாண துப்பாக்கிதாரியால் 4 பேர் சுட்டுக் கொலை
- உள்ளே போனால் தொலைந்துவிடுவோம் - இந்தியக் குகையில் ஒரு ரகசிய உலகம்
-
சட்டசபை தேர்தல் தேதி விரைவில்.. தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி அரசாணை வெளியீடு! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்















Click it and Unblock the Notifications