அப்போலோ சென்ற பி.ஆர். பாண்டியனும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை.. நலமாக இருப்பதாக தகவல்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குணமடைந்து வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நலம் இல்லாமல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரை சந்திக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அதிமுக தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று விவசாயிகள் சார்பாக முதல்வரை பார்க்க பி.ஆர். பாண்டியன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவரால் முதல்வரை பார்க்க முடியவில்லை. அதிமுகவின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு சென்றார். மேலும், முதல்வர் நலம் பெற விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்து பேசும் போது விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசியதாக தெரிவித்த பி.ஆர். பாண்டியன், முதல்வர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டதாக கூறினார்.












Click it and Unblock the Notifications