Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.5000 லஞ்சம் பெற்றதாக கோவையில் கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர் கைது

ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் வழக்கு ஒன்றில் துறை ரீதியான விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்களூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உரம் விநியோகம் செய்து வந்துள்ளார். அதில் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும் கருப்புசாமி தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 Co-operative Society Senior officer arrested in kovai

இதையடுத்து கருப்பசாமி மீது துறைரீதியான விசாரணையை தாமதப் படுத்துவதற்காக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் வசந்தராஜ் என்பவர் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக கருப்பசாமி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அளித்த ஆலோசனையின் படி ரசாயணம் தடவிய பணத்தை வசந்தராஜிடம் வழங்கியுள்ளார். பணத்தை வசந்தராஜ் பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகதிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+