டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் தொய்வு! வருகிறது அதி நவீன ரிலையன்ஸ் கப்பல்!
சென்னை : காணாமல் போன டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் அதி நவீன ரிமோட் சென்சார் கொண்ட ரிலையன்ஸ் கப்பல் வந்து கொண்டிருப்பதாக கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐ.ஜி சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரையில் உள்ள கிழக்கு மண்டல கடலோர காவல்படை தலைமையகத்தில் ஐ.ஜி சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், கடந்த 8-ம் தேதி காணாமல் போன டோர்னியர் விமானத்தை தேடும் பணி முழுவீச்சில் தொடர்வதாக தெரிவித்தார்.
சிதம்பரத்தில் இருந்து 60 நாட்டிகல் மைல் கடல் பகுதியில் இருந்து சிக்னல் கிடைப்பதாகவும், ஆனால் அந்த சிக்னல் தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார்.
விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சாகர் நிதி கப்பல் தேடும் பணியை நேற்றுடன் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்த சர்மா, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அதி நவீன ரிமோட் சென்சார் வசதி கொண்ட கப்பல் வந்து கொண்டிருப்பதாகவும், நாளை (19-06-2015) முதல் அக்கப்பல் தேடும் பணியை தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் வெளிநாட்டு உதவியை நாடும் எண்ணம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மாயமான மூன்று வீரர்களின் மனைவியர் விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிருப்தி அடையவில்லை என்றும், இது குறித்து பிரதமர் அலுவலகம் கடலோர காவல் படையிடம் நேரடியாக விளக்கம் கேட்கவில்லை என்றும் ஐ.ஜி. சர்மா விளக்கம் அளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications