கடலூர் பேராசிரியைக்கு ஆதரவாக சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் போராட்டம்
சென்னை: இடமாற்றம் செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை சாந்தியை, மீண்டும் அதே கல்லூரியில் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில், சுமார் 3,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மாணவ, மாணவியரின் தேர்வு கட்டணத்தை உயர்த்தியது. இதை கண்டித்து, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் இதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவியர், கடந்த மாதம் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழகம் குறைத்தது.

தேர்வு கட்டணத்தை குறைப்பதற்கு, மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சிண்டிகேட் உறுப்பினரும், கடலூர் கே.என்.சி., கல்லூரி பேராசிரியருமான சாந்தி, சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இதை கண்டித்தும், அவரை மீண்டும் கடலூர் கல்லூரியில் பணியமர்த்தக்கோரியும், நேற்று காலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்து, பேராசிரியை இட மாற்றம் செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில், இன்று சென்னை செல்லம்மாள் பெண்கள் கல்லூரி மாணவிகள் இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கைகளில் ‘தமிழக அரசே கடலூர் கே.என்.சி. பேராசிரியர் சாந்தி மீதான பழிவாங்கல் நடவடிக்கையைத் திரும்பப் பெறு' என்ற அட்டைகளை ஏந்தியபடி அமர்ந்திருந்தனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications