கடலூர் பேராசிரியைக்கு ஆதரவாக சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் போராட்டம்
சென்னை: இடமாற்றம் செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை சாந்தியை, மீண்டும் அதே கல்லூரியில் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில், சுமார் 3,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மாணவ, மாணவியரின் தேர்வு கட்டணத்தை உயர்த்தியது. இதை கண்டித்து, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் இதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவியர், கடந்த மாதம் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழகம் குறைத்தது.

தேர்வு கட்டணத்தை குறைப்பதற்கு, மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சிண்டிகேட் உறுப்பினரும், கடலூர் கே.என்.சி., கல்லூரி பேராசிரியருமான சாந்தி, சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இதை கண்டித்தும், அவரை மீண்டும் கடலூர் கல்லூரியில் பணியமர்த்தக்கோரியும், நேற்று காலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்து, பேராசிரியை இட மாற்றம் செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில், இன்று சென்னை செல்லம்மாள் பெண்கள் கல்லூரி மாணவிகள் இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கைகளில் ‘தமிழக அரசே கடலூர் கே.என்.சி. பேராசிரியர் சாந்தி மீதான பழிவாங்கல் நடவடிக்கையைத் திரும்பப் பெறு' என்ற அட்டைகளை ஏந்தியபடி அமர்ந்திருந்தனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications