பாஜகவுக்கு எதிராக ஒன்று திரளுவோம்.. "அரசியல் அழைப்பு"டன் முடிந்த கருணாநிதி நினைவேந்தல்!
Recommended Video

சென்னை: "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் தொடங்கியது.
இரங்கல் கூட்டமாக இருந்தாலும் இது பாஜகவுக்கு எதிராக அனைவரையும் அணி திரளுமாறு மறைமுகமாக தட்டி எழுப்பிய கூட்டமாக மாறிப் போனது.

கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர் விவரம்:
முன்னாள் பிரதமர் தேவெகௌடா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பாஜக சார்பில் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் வந்திருந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பல தலைவர்களும் பாஜகவுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்துப் பேசினர்.












Click it and Unblock the Notifications