ஜெ. மரணம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆணையம் விரைவில் தொடங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் உத்தரவிட்டார். ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆட்சியாளர்கள் சொல்வதைத்தான் கேட்பார் என சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விரைவில் விசாரணை
அதாவது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்கக்கூடாது என கூறுவது நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்றார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ள ஆணையம் விசாரணையை விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

முறையாக விசாரணை
விசாரணை ஆணையம் முறையாக விசாரணையை நடத்தும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்பினார்கள் என்றும் அவர் கூறினார்.

இணைப்புக்கு இடமில்லை
மக்கள் விரும்பிய படியே சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். மேலும் சசிகலா மற்றும தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தம்பிதுரைக்கு எதிராக
அதிமுக எம்பி தம்பிதுரை சசிகலாவும் தினகரனும் விரைவில் அதிமுகவில் வந்து சேர்வார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications