ஜெ. மரணம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆணையம் விரைவில் தொடங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் உத்தரவிட்டார். ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆட்சியாளர்கள் சொல்வதைத்தான் கேட்பார் என சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விரைவில் விசாரணை
அதாவது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்கக்கூடாது என கூறுவது நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்றார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ள ஆணையம் விசாரணையை விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

முறையாக விசாரணை
விசாரணை ஆணையம் முறையாக விசாரணையை நடத்தும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்பினார்கள் என்றும் அவர் கூறினார்.

இணைப்புக்கு இடமில்லை
மக்கள் விரும்பிய படியே சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். மேலும் சசிகலா மற்றும தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தம்பிதுரைக்கு எதிராக
அதிமுக எம்பி தம்பிதுரை சசிகலாவும் தினகரனும் விரைவில் அதிமுகவில் வந்து சேர்வார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications