தியாகு உண்ணாவிரதம்.. கைவிட நடவடிக்கை கோரி கருணாநிதிக்கு மன்மோகன்சிங் கடிதம்

இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமர் மன்மோகன் சிங்கை, தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்கின்ற கோரிக்கையினை வற்புறுத்தி கேட்டுக்கொண்டார்.
4 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டு போரின்போது, ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கை தமிழர்களின் உயிரைப் பறித்த, சிங்கள இனவெறி அரசு நடத்தும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற தமிழகத்தின் ஒருமித்த குரலுக்கு பிரதமர் செவி சாய்க்கவேண்டுமென்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் - மாணவர்களும் - உலகத் தமிழ் இன அமைப்புகளும் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து போராடி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த 12 நாட்களுக்கு மேல் இதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் தோழர் தியாகுவின் உடல் மோசமாகி வரும் நிலை பற்றியும், விரிவாக எடுத்துரைத்தார்.
இதனை கவனமுடன் கேட்டறிந்த பிரதமர் மன்மோகன் சிங், இந்த பிரச்சினை குறித்து தி.மு.க. மற்றும் தமிழக மக்களுடைய உணர்வுகளை மதித்து உரிய நல்ல முடிவுகளை எடுப்போம் என்றும்; தி.மு.க. தலைவர் கருணாநிதி தலையிட்டு, உண்ணாவிரதம் இருந்து வரும் தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications