விடாது கருப்பு.. சசிகலா உள்ளிட்டோர் மீது டிஜிபியிடம் மீண்டும் நில அபகரிப்பு புகார்!
தனியார் நிலங்களை ஆக்ரமிப்பு செய்ததாக சசிகலா உள்ளிட்டோர் மீது டிஜிபி அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர் உள்ளிட்ட இடங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமிப்பு செய்ததாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றினார் சசிகலா. தற்போது முதல்வராகவும் வர வேண்டும் என கபளீகரம் செய்து வருகிறார். ஆனால் சசிகலா முதலமைச்சர் ஆவதை பலரும் விரும்பவில்லை. அதிமுகவில் கூட சசிகலாவுக்கு முழுமையான ஆதரவு இல்லை. கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் தமிழக டிஜிபியிடம் சசிகலா மீது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், சசிகலாவும், அவரது உறவினர்களும் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர், கருங்குழிப்பள்ளம் ஆகிய இடங்களில் 112 ஏக்கர் நிலத்தை சசிகலாவும், அவரது உறவினர்களும் ஆக்ரமித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்ற துடித்து வரும் சசிகலாவுக்கு வழக்குகளும், புகார்களும் அடுத்தடுத்து வரிசை கட்டுவது சிக்கலை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications