பற்களை பிடுங்கிய.. ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார்
சென்னை: கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஏஸ்பி பல்வீர் சிங்கிற்கு எதிராக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்.
அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதிகளில் சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, காவல் அதிகாரி பல்வீர் சிங் கொடூரமாக சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பல்வீர் சிங் இடைநீக்கம்
அதாவது, காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் நபர்களின் பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக உதவி கலெக்டர் முகம்மது சபீர் விசாரணை நடத்தி வருகிறார்.

ஆறு வாரத்திற்குள் அறிக்கை
காவல்துறை அதிகாரி விசாரணை கைதிகளிடம் சித்ரவதை செய்தது தொடர்பாக செய்தி ஊடகங்களில் வெளியானதன் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி ஆறு வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர்
மேலும் புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர் சிங் வரும் ஏப்ரல் 3-ம் தேதி மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல்துறை அதிகாரி பல்வீர்சிங்கிற்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர் ஆசிஸ் கோயல் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

மனித உரிமை ஆணையத்தில்
இந்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வரும் நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications