For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்வாடி பள்ளி குழந்தைகள் கண் பாதிப்பு விவகாரம்.. பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

ஏர்வாடியில் பள்ளி குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளி ஆண்டுவிழாவினால் நேர்ந்த சோகம்-வீடியோ

    நெல்லை: ஏர்வாடியில் பள்ளி குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழாவில் அதிகத் திறனுள்ள மின்விளக்குகளைப் பயன்படுத்தியதால் மாணவர்களுக்கும் விழாவுக்கு வந்த பெற்றோருக்கும் கண்களில் எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், கண்கூசுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன.

    Complaint on Nellai school management and light sound organizers

    இதையடுத்து மாணவர்கள் பெற்றோர் என 100க்கும் மேற்பட்டோர் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர். மருத்துவர்கள் குழந்தைகளின் கண்களைப் பரிசோதித்துச் சிகிச்சை அளித்தனர்.

    ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோரின் கண் பார்வையில் பிரச்சனை ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏர்வாடி பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏர்வாடியில் அரசு உதவிபெறும் பள்ளி ஆண்டுவிழாவில் அதிக சக்திவாய்ந்த விளக்குகளைப் பயன்படுத்தியதால் பள்ளி மாணவர்களுக்கு கண் பாதிப்பு என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Complaint on Nellai school management and light sound organizers. Nellai school students parents affected by the light in School annual day function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X