”தொகுதிதான் முக்கியம்” – தேர்தலில் வாக்களிக்காத கன்னியாகுமரி காங். வேட்பாளர்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நேற்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான ஹெச்.வசந்தகுமார் வாக்களிக்கவில்லை என்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், அவரவர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் மட்டும் வாக்களிக்கவில்லை.

Congress candidate H.Vasanthakumar didn't vote…

அவருக்கு சொந்த ஊர் இப்பகுதியாக இருந்தாலும் சென்னையில் வசித்து வருவதால், அவருக்கான வாக்கு சென்னையில்தான் உள்ளது. இதனால் அவர் வியாழக்கிழமை விமானத்தில் சென்னை சென்று வாக்களித்து விட்டு மீண்டும் மாலை நாகர்கோவில் திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணியிருந்தனர்.

ஆனால், அவர் சென்னை செல்லவில்லை. மாறாக வியாழக்கிழமை காலை முதல் கன்னியாகுமரியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளாகச் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து வசந்தகுமார் கூறுகையில், " சென்னை சென்று வாக்களிக்க வேண்டிய நிலை இருந்தது. வாக்குப்பதிவு அன்று தொகுதியை விட்டு சென்னை சென்றால் இங்குள்ள பணிகள் பாதிக்கப்படும் எனக் கருதியே அங்கு செல்லவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+