சென்னை ஆட்சியர், காவல் ஆணையரை இடமாற்றம் செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர் காவல் ஆணையர் ஆகியோரை இடமாறுதல் செய்வது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள பி அன்ட் சி மில் வளாகத்தில் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. சமீபத்தில் மில் மூடப்பட்டதையடுத்து குடியிருப்புகளை காலி செய்யும்படி தொழிலாளர்களிடம் கூறப்பட்டது.

ஆனால், அதனை எதிர்த்து இளங்கோவன் என்பவர் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மில் அமைந்திருக்கும் இடம் அரசுக்கு சொந்தமான இடம். அந்த இடத்தை தனியாருக்கு விற்க முடியாது. அந்த இடத்தை வாங்கிய நபர் எங்களை அங்கிருந்து காலி செய்யும்படி வற்புறுத்தி வருகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்திருத்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடந்தாண்டு உத்தரவிட்டார்.
ஆனபோதும், குடியிருப்பில் 6 வீடுகள் இடிக்கப்பட்டன. இது தொடர்பாக எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தில் புகார் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆணைய உறுப்பினர்கள் குடியிருப்பு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும், மாற்று ஏற்பாடுகள் செய்யவும் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத் தரவை மதிக்காததால் சென்னை ஆட்சியர் சுந்தரவல்லி, சென்னை மாநகர் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், ‘சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோரை இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பரிசீலிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications