பேஸ்புக் வீடியோவில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை.. மீண்டும் பரபரப்பில் 'மெரினா காவலர்' மாயழகு
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராளிகளின் மத்தியில் மைக் பிடித்து பேசி பிரபலமான போலீஸ் கான்ஸ்டபிள் மாயழகு, தற்போது ஒரு வீடியோவை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பேசி சமூக வலைத்தளங்களில் வைரலானவர் கான்ஸ்டபிள் மாயழகு.
இவரை காவல்துறை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அது இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அடுத்த அதிரடியாக நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வதந்தி
இந்த வீடியோவில், மாயழகு கூறுகையில், தன்னை தொடர்புப்படுத்தி வெளியாகும் வதந்திகளுக்கும் பொய்யான தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிடுவதாகவும், தற்போது நான் என் வீட்டில் இருந்தபடி இந்த வீடியோவை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வேறு வேலை வேண்டாம்
மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின்போது தான் பேசியது தொடர்பாக தன் மீது துறைரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நாளை பணிக்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்துள்ளது என்றும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை, தனக்கு போலீஸ் வேலை போய்விட்டால் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை தருவதாக முன்னர் சமூக வலைத்தளங்களில் சிலர் தெரிவித்திருந்ததை குறிப்பிட்டுள்ள அவர், அந்த வேலை இனி எனக்கு தேவை இல்லை என்றும், போலீஸ் வேலைதான் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

சக காவலர் வீர மரணம்
அதேநேரம், விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அவரது சக காவலர் சங்கர் என்பவரின் மனைவி காளை தாக்கி வீர மரணம் அடைந்துவிட்டதாகவும், அந்த சங்கரின் மனைவிக்கு அந்த வேலையை தந்து உதவினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

முதல்வருக்கு கோரிக்கை
ஒருவேளை, தனியார் நிறுவனங்கள் வேலை அளிக்க தயாராக இருப்பதாக வந்த தகவல்கள் பொய்யானதாக இருக்குமானால், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இறந்த காவலர் சங்கரின் குடும்பத்துக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் நிதியை மட்டும் தராமல், அவரது மனைவிக்கு ஒரு அரசு வேலையை தந்து ஆதரவற்று நிற்கும் அவரது குழந்தைகளின் கஷ்டத்தை போக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் மாயழகு கூறியுள்ளதோடு, இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மிக அதிகமாக ‘ஷேர்' செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications