கிளம்பினார் ஜார்ஜ்.. வேளச்சேரி என்கவுன்டர் புகழ் திரிபாதி மீண்டும் கமிஷனரானார்!
ஜார்ஜை நேற்றுதான் தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்தது. அவருக்குப் பதில் ஜே.கே.திரிபாதி புதிய ஆணையராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று திரிபாதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஜார்ஜ் விடை பெற்றார்.
பொறுப்பை ஒப்படைத்த ஜார்ஜ், தான் காவல்துறை ஆணையராக பணியாற்றிய கால கட்டத்தில் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து காவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
வேளச்சேரி என்கவுண்டர் புகழ் திரிபாதி
சென்னை கமிஷனராக திரிபாதி இருந்தபோதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேளச்சேரி என்கவுண்டர் சம்பவம் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.
2 வங்கிகளில் கொள்ளையடித்த வட மாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் வேளச்சேரியில் ஒரு வீட்டில் தங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீஸார் மிகவும் திட்டமிட்டு என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.