தமிழகத்தில் படுவேகமாக உயரும் கொரோனா.. 500 தாண்டிய தினசரி பாதிப்பு.. திருப்பூரில் ஒருவர் பலி! ஷாக்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தினசரி வைரஸ் பாதிப்பு பல வாரங்களுக்குப் பின் மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் இதுவரை 3 அலைகள் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டாவது அலையில் தான் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அப்போது கொரோனா பெட்கள் கூட போதியளவில் இல்லாமல் இருந்தது.
அதன் பின்னர் கொரோனா வேக்சின் உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்தது.

கொரோனா பாதிப்பு: இதனால் கொரோனாவுக்கு போடப்பட்ட கட்டுப்பாடுகளும் மெல்ல படிப்படியாக நீக்கப்பட்டன. இதற்கிடையே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் இப்போது பரவும் புதிய வகை ஓமிக்ரான் காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே பல மாதங்களுக்குப் பிறகு இப்போது, தினசரி கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 5869 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 9 பேர் உட்பட 502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,01,701ஆக உயர்ந்துள்ளது.
பாசிட்டிவ் விகிதம்: மாநிலத்தில் இப்போது கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 8.4ஆக உள்ளது. அதிகபட்சமாகச் செங்கல்பட்டில் 11.5%, கன்னியாகுமரியில் 11.4%, கோவையில் 11.2% பாசிட்டிவ் ரேட் உள்ளது. சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 10.2%ஆக உள்ளது.

அதேபோல தமிழகத்தில் ஆக்டிவ் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. நேற்று 2876 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 3048ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 329 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,60,598ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா உயிரிழப்பு கடந்த சில நாட்களாக கொரோனா உயிரிழப்புகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் 38,055 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

மாநிலத்தில் இன்று அதிகபட்சமாகச் சென்னையில் 136 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தவிர வேறு எந்தவொரு மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு 100ஐ தாண்டவில்லை.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற போதிலும் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications