புதுக்கோட்டையில் 2 வயது பெண் குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தம்பதி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 2 வயது பெண் குழந்தையுடன் பெற்றோர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது சிலட்டூர். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(36). விவசாயி. அவரது மனைவி சீதா(28). அவர்களின் மகள் அஜீதா(2). இன்று காலை வெகுநேரமாகியும் ரமேஷின் வீட்டுக் கதவு திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வந்து ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது ரமேஷ் தனது மனைவி, மகளுடன் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ் வீட்டில் இருந்து டைரி ஒன்றை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications