உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் அராஜகம்: சிபிஐ, சி.பி.எம். கண்டனம்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்வதும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுக்களை நிராகரிப்பதும் நடைமுறையாகி விட்டது.
குறிப்பாக, புதுக்கோட்டை நகரமன்றத் தலைவருக்கான தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜகவைச் சார்ந்தவர்கள் கடைசி நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு தடுத்து விட்டார்கள்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக புதுக்கோட்டை நகர்மன்ற ஆணையர் நேரம் முடிந்து விட்டது என்று கூறி வேட்புமனுவை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் சென்று முறையிட்ட போது, நகர்மன்ற ஆணையர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு துணையாக நின்றார்.
மாநிலத்தில் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வேட்புமனுக்கள் எந்தக் காரணமுமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. நிர்ப்பந்தத்தால் தேர்தல் அலுவலர்கள் சட்ட விரோதமாக ஆளுங்கட்சியின் அராஜகத்திற்கு துணையாக நின்றுள்ளனர்.
ஆளுங்கட்சியின் அராஜகத்தையும், ஜனநாயக விரோதப் போக்கையும் மற்றும் ஆளுங்கட்சிக்கு துணையாக இருக்கக் கூடிய தேர்தல் அலுவலர்களின் சட்ட விரோதமான நடவடிக்கையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வன்மையாக கண்டிக்கிறது. மேற்கண்ட ஜனநாயகப் படுகொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கு கண்டன இயக்கம் நடத்திட வேண்டுமென இரண்டு கட்சிகளின் மாநிலத் தலைமையும் கட்சி அணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது. உள்ளாட்சி மன்றங்கள் ஜனநாயகபூர்வமாக செயல்பட, அடித்தள ஜனநாயகத்தை பாதுகாத்திட இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென தமிழக வாக்காளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேண்டுகிறது,
இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications