உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் அராஜகம்: சிபிஐ, சி.பி.எம். கண்டனம்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்வதும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுக்களை நிராகரிப்பதும் நடைமுறையாகி விட்டது.
குறிப்பாக, புதுக்கோட்டை நகரமன்றத் தலைவருக்கான தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜகவைச் சார்ந்தவர்கள் கடைசி நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு தடுத்து விட்டார்கள்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக புதுக்கோட்டை நகர்மன்ற ஆணையர் நேரம் முடிந்து விட்டது என்று கூறி வேட்புமனுவை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் சென்று முறையிட்ட போது, நகர்மன்ற ஆணையர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு துணையாக நின்றார்.
மாநிலத்தில் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வேட்புமனுக்கள் எந்தக் காரணமுமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. நிர்ப்பந்தத்தால் தேர்தல் அலுவலர்கள் சட்ட விரோதமாக ஆளுங்கட்சியின் அராஜகத்திற்கு துணையாக நின்றுள்ளனர்.
ஆளுங்கட்சியின் அராஜகத்தையும், ஜனநாயக விரோதப் போக்கையும் மற்றும் ஆளுங்கட்சிக்கு துணையாக இருக்கக் கூடிய தேர்தல் அலுவலர்களின் சட்ட விரோதமான நடவடிக்கையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வன்மையாக கண்டிக்கிறது. மேற்கண்ட ஜனநாயகப் படுகொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கு கண்டன இயக்கம் நடத்திட வேண்டுமென இரண்டு கட்சிகளின் மாநிலத் தலைமையும் கட்சி அணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது. உள்ளாட்சி மன்றங்கள் ஜனநாயகபூர்வமாக செயல்பட, அடித்தள ஜனநாயகத்தை பாதுகாத்திட இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென தமிழக வாக்காளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேண்டுகிறது,
இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications