Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் அராஜகம்: சிபிஐ, சி.பி.எம். கண்டனம்

Subscribe to Oneindia Tamil

CPI, CPM slams TN govt
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகத்தைக் கண்டித்து இயக்கம் துவக்கப்படும் என்று சிபிஎம் - சிபிஐ கூட்டாக அறிவித்துள்ளன.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்வதும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுக்களை நிராகரிப்பதும் நடைமுறையாகி விட்டது.

குறிப்பாக, புதுக்கோட்டை நகரமன்றத் தலைவருக்கான தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜகவைச் சார்ந்தவர்கள் கடைசி நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு தடுத்து விட்டார்கள்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக புதுக்கோட்டை நகர்மன்ற ஆணையர் நேரம் முடிந்து விட்டது என்று கூறி வேட்புமனுவை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் சென்று முறையிட்ட போது, நகர்மன்ற ஆணையர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு துணையாக நின்றார்.

மாநிலத்தில் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வேட்புமனுக்கள் எந்தக் காரணமுமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. நிர்ப்பந்தத்தால் தேர்தல் அலுவலர்கள் சட்ட விரோதமாக ஆளுங்கட்சியின் அராஜகத்திற்கு துணையாக நின்றுள்ளனர்.

ஆளுங்கட்சியின் அராஜகத்தையும், ஜனநாயக விரோதப் போக்கையும் மற்றும் ஆளுங்கட்சிக்கு துணையாக இருக்கக் கூடிய தேர்தல் அலுவலர்களின் சட்ட விரோதமான நடவடிக்கையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வன்மையாக கண்டிக்கிறது. மேற்கண்ட ஜனநாயகப் படுகொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கு கண்டன இயக்கம் நடத்திட வேண்டுமென இரண்டு கட்சிகளின் மாநிலத் தலைமையும் கட்சி அணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது. உள்ளாட்சி மன்றங்கள் ஜனநாயகபூர்வமாக செயல்பட, அடித்தள ஜனநாயகத்தை பாதுகாத்திட இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென தமிழக வாக்காளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேண்டுகிறது,

இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+