திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி
திண்டுக்கல்: திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான என். பாண்டி (வயது 55) போட்டியிடுகிறார்.
பி.யு.சி. வரை படித்துள்ள இவர் 1978ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 36 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், சுகதேவ் என்ற மகனும், சிந்துஜா என்ற மகளும் உள்ளனர்.
வேலை அல்லது நிவாரணம், பழனி வட்டம், நெய்க்காரப்பட்டி நிலப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் தலைமையேற்று பங்கேற்று வெற்றி கண்டவர்.
பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் பங்கேற்றதன் காரணமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது திண்டுக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாண்டி, போட்டி வேட்பாளர்களை வென்று கரையேறுவாரா?