தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம்- மாணவ, மாணவிகளும் பங்கேற்பு!
சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம் நடந்துவருகிறது.
தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களும் கேடுகள் ஏற்படுவதாகவும், ஆலை விரிவாக்க நடவடிக்கையை அரசு கைவிட்டு ஆலையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டிபுரம் கிராம மக்கள் 53வது நாளாக இன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முன்னூறுக்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையின் வாயிலின் முன்பு போராடினர். இதனிடையே தூத்துக்குடி வீரபாகு மகளிர் கல்லூரி மாணவிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications