மீனிலும் கச்சா எண்ணெய் கலந்திருக்கலாம்.. சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை
கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன்களும் விஷத்தன்மையானதாக மாறி இருக்கலாம் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சென்னை: எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்தது. கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன்களும் விஷத்தன்மையானதாக மாறி இருக்கலாம் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதனால் தற்போது மீன் சாப்பிடுவதை தவிர்க்கவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த சனிக்கிழமை இரண்டு சரக்குப் கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சேதமடைந்த கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்தது. இதனால் எர்ணாவூர் பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் திருவொற்றியூர் உள்ளிட்ட கடல் பகுதிகள் எண்ணெய் படலமாக மாறியது.

இதன் காரணமாக கடலில் பரவிய எண்ணெய், மெரினா கடற்கரை, திருவான்மியூர், பெசண்ட் நகர் கடல் பகுதி வரையிலும் பரவியுள்ளது. திருவான்மியூர் வரையில் கடல் பகுதிகள் எண்ணெய் படலமாக காட்சி அளிப்பதால் அதனை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன்களும் விஷத்தன்மையானதாக மாறி இருக்குமோ? என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீன்கள் சாப்பிடுவதை சில தினங்களுக்கு தவிர்ப்பது நல்லது என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications