மீனிலும் கச்சா எண்ணெய் கலந்திருக்கலாம்.. சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை
கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன்களும் விஷத்தன்மையானதாக மாறி இருக்கலாம் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சென்னை: எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்தது. கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன்களும் விஷத்தன்மையானதாக மாறி இருக்கலாம் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதனால் தற்போது மீன் சாப்பிடுவதை தவிர்க்கவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த சனிக்கிழமை இரண்டு சரக்குப் கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சேதமடைந்த கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்தது. இதனால் எர்ணாவூர் பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் திருவொற்றியூர் உள்ளிட்ட கடல் பகுதிகள் எண்ணெய் படலமாக மாறியது.

இதன் காரணமாக கடலில் பரவிய எண்ணெய், மெரினா கடற்கரை, திருவான்மியூர், பெசண்ட் நகர் கடல் பகுதி வரையிலும் பரவியுள்ளது. திருவான்மியூர் வரையில் கடல் பகுதிகள் எண்ணெய் படலமாக காட்சி அளிப்பதால் அதனை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன்களும் விஷத்தன்மையானதாக மாறி இருக்குமோ? என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீன்கள் சாப்பிடுவதை சில தினங்களுக்கு தவிர்ப்பது நல்லது என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications