கண்களில் நிரம்பி வழியும் கண்ணீர்க் கடல் - வெள்ளத்தால் தத்தளிக்கும் கடலூர் மக்கள்!
கடலூர்: கடலூர்... ஊரின் பெயரிலேயே கடலை வைத்திருப்பதாலோ என்னவோ, அந்த மக்களின் கண்கள் கண்ணீரால் கடலாகிப் போய் கொட்டுகின்றது அடித்துப் புரட்டிப் போட்ட வெள்ளப் பாதிப்புகளால்.
இந்நிலையில் தலைநகர் சென்னைக்கு கொடுத்த முக்கியத்துவத்தினை தங்களுக்கு அளிக்கவில்லை என்று கடலூர் மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.

பெரிய காட்டுப்பாளையம், விசூர், ஆகிய பண்ருட்டி தாலுக்கா கிராமங்களும் குறிஞ்சிபாடி தாலுக்காவை சேர்ந்த கல்லணம், பூதபாண்டி ஆகிய கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டன. ஐம்பதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வெற்றிலை, மரவள்ளி போன்ற பயிர்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன.
கடலூர் சிப்காட் தொழிற்சாலை முழுமையாக நாசமடைந்து, ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமடைந்து, 630 கிராமங்களை சேர்ந்த 37,500 குடும்பங்களை சேர்ந்த சுமார் 15 லட்ச மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தொண்டு நிறுவங்கள் கொண்டு வந்து தரும் அரிசிக்கும், பிஸ்கட்டாலேயே கடந்த ஒரு மாத காலமாக உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.
பிழைப்பதற்க்கு வேலைக்காவது செல்லலாம் என்றால் சாலைகள் இல்லை, அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் எல்லாம் தினம் பெய்யும் மழையை போல தினம் ஒரு ஏரியை திறந்து விடுவதை மட்டுமே தொழிலாக செய்கிறார்கள்.
அதனால் விடாது பெய்யும் மழை போல வெள்ளமும் விடாது ஏறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் இயல்பு நிலைக்கு வர பல மாதங்கள் பிடிக்கும். இயல்பு நிலை திரும்பி வந்தாலும் பழைய வாழ்க்கை அவர்களுக்கு திரும்ப கிடைக்க வருடங்கள் பல பிடிக்கும் என்பது மனதை குத்திக் கிழிக்கும் உண்மை.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications