வர்தா புயலால் கனமழை- சென்னை, காஞ்சி, உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வர்தா புயலில் தாக்கத்தால் கனமழை கொட்டி வருவதை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சென்னை, ராயபுரம், தண்டையார்பேட்டை, புதுவண்ணார்பேட்டையில் மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினபபாக்கம், எம்.ஆர்.சி.நகர், காமராஜர் சாலை, அண்ணாசாலை, நந்தனம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பழவேற்காடு, ஊத்துக்கோட்டை, செங்குன்றத்தில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம், கல்பாக்கம், மாமல்லபுரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூரின் பழவேற்காட்டில் பலத்த கடற்காற்று. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிப்பு.

வானிலை எச்சரிக்கை
வர்தா புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மணிக்கு 11 வேகத்தில் வர்தா புயல் கரையை கடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 20 செ.மீ. அளவிற்கு மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

பலத்த காற்று வீசும்
வர்தா புயல் கரையை கடந்த பின்பும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் காற்று 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது. கடல் சீற்றத்துடனும், கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் 2 தாலுக்காவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானூர், மரக்காணம் ஆகிய 2 தாலுக்காவிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை
வர்தா புயலை முன்னிட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு திங்கட்கிழமை விடுமுறை அளிக்கவோ அல்லது வீட்டில் இருந்து பணி செய்யவோ அனுமதிக்க வேண்டும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்று அறிவுறுத்தியதை அடுத்து பல தனியால் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications