ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் – சிபிஐ டி.ராஜா பேட்டி!
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை ஏற்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரான டி.ராஜா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை ஏற்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

டி.ராஜா புதுவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "மோடி பிரதமராக வந்த பின்னர் பின்பற்றப்படும் கொள்கைகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளை பின்பற்றியே உள்ளது. விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதாக தேர்தல் பிரசாரம் செய்தனர்.
ஆனால் பணவீக்கம் அபாயகரமாக உள்ளது. கருப்புப்பணம் குறித்த நடவடிக்கை இல்லை. வருகிற 16 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.
ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதில் எங்கள் கட்சியும் பங்கு எடுத்து நிதி திரட்டி வருகிறது.
ஜெயலலிதாவுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை ஏற்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. தீர்ப்பை எதிர்கொள்ள சட்டரீதியாக அணுக வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த கூடாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications