பாலியல் மற்றும் கொலை குற்றவாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு
சிறுமி ஹாசினி மற்றும் தன் தாய் சரளாவை கொன்ற வழக்கில் தலைமறைவாகி, மும்பையில் கைதான தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னை: சிறுமி ஹாசினி மற்றும் தன் தாய் சரளாவை கொன்ற வழக்கில் தலைமறைவாகி, மும்பையில் கைதான தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர், பாபுவின் 7 வயது மகள் ஹாசினி. இவரை, அதே பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற மென்பொறியாளர் பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றான்.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் தஷ்வந்துக்கு ஜாமீன் கிடைத்தது. அவன் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டது.
தஷ்வந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு தலைமறைவானார்.

தப்பிய தஷ்வந்த்
தமிழக காவல்துறையினர் மும்பையில் தஷ்வந்தை கைது செய்தனர். ஆனால் போலீஸ் பிடியில் இருந்து தப்பினான் தஷ்வந்த்.

மும்பை நீதிமன்றம்
தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மீண்டும் தஷ்வந்த் கைது செய்யப்பட்டான். கை கால்களில் விலங்கிட்டு தஷ்வந்தை மும்பை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி வீட்டில் ஆஜர்
தஷ்வந்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். மும்பையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்ட அவனை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

புழல் சிறையில் அடைப்பு
தஷ்வந்திற்கு டிசம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் உத்தரவிட்டார். இதனையடுத்து தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

புழல் அருகே நண்பர்கள் கைது
தஷ்வந்துக்கு உதவிய அவனது நண்பர்கள் தாஸ், டேவிட் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். புழல் அருகே காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாயும்
தஷ்வந்த் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவன் மீது குண்டர் சட்டம் பாயும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமி ஹாசினி கொலை வழக்கை இம்மாத இறுதிக்குள் முடிவுக்குள் கொண்டுவரவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications