பாலியல் மற்றும் கொலை குற்றவாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு
சிறுமி ஹாசினி மற்றும் தன் தாய் சரளாவை கொன்ற வழக்கில் தலைமறைவாகி, மும்பையில் கைதான தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னை: சிறுமி ஹாசினி மற்றும் தன் தாய் சரளாவை கொன்ற வழக்கில் தலைமறைவாகி, மும்பையில் கைதான தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர், பாபுவின் 7 வயது மகள் ஹாசினி. இவரை, அதே பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற மென்பொறியாளர் பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றான்.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் தஷ்வந்துக்கு ஜாமீன் கிடைத்தது. அவன் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டது.
தஷ்வந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு தலைமறைவானார்.

தப்பிய தஷ்வந்த்
தமிழக காவல்துறையினர் மும்பையில் தஷ்வந்தை கைது செய்தனர். ஆனால் போலீஸ் பிடியில் இருந்து தப்பினான் தஷ்வந்த்.

மும்பை நீதிமன்றம்
தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மீண்டும் தஷ்வந்த் கைது செய்யப்பட்டான். கை கால்களில் விலங்கிட்டு தஷ்வந்தை மும்பை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி வீட்டில் ஆஜர்
தஷ்வந்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். மும்பையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்ட அவனை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

புழல் சிறையில் அடைப்பு
தஷ்வந்திற்கு டிசம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் உத்தரவிட்டார். இதனையடுத்து தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

புழல் அருகே நண்பர்கள் கைது
தஷ்வந்துக்கு உதவிய அவனது நண்பர்கள் தாஸ், டேவிட் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். புழல் அருகே காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாயும்
தஷ்வந்த் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவன் மீது குண்டர் சட்டம் பாயும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமி ஹாசினி கொலை வழக்கை இம்மாத இறுதிக்குள் முடிவுக்குள் கொண்டுவரவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications