டெல்லி செங்கோட்டை தாக்குதல்: தூக்கு கைதி முகமது ஆரிப் மறுசீராய்வு மனு சுப்ரீம்கோர்ட்டில் ஏற்பு!!
டெல்லி: டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக முகமது ஆரிப் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் 2000-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும் பின்னர் உறுதி செய்தது. ஆனால் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து முகமது ஆரிப் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆரிப்பின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது. ஆனால் 14 ஆண்டுகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டபடியால் தமக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என ஆரிப் மீண்டும் ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2014-ம் ஆண்டு ஆரிப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை மட்டும் விதித்தது. இறுதி விசாரணையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ஆரிப் தாக்கல் செய்த மறுஆய்வு மற்றும் திருத்தம் கோரும் மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆரிப் மீண்டும் மறுசீராய்வு மனுதாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரிப்பின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications