ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு: தமிழிசை!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து தேர்தல் குழு முடிவு செய்யும் என அவர் கூறினார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு கூடி முடிவுகளை டெல்லிக்கு தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார். இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் தொடக்கம் முதலே கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் முறையாக பராமரிக்கபபடவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.