ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா அஞ்சலி.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்

மறைந்த ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளான இன்று அவரது அண்ணன் மகள் தீபா மெரினாவிற்கு சென்று நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

அதிமுகவில் சசிகலா பிரிவு என்றும் ஓபிஎஸ் பிரிவு என்றும் இரண்டு அணிகள் பிரிந்து தமிழகத்தில் ஜெயலலிதா பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இதே போன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் தனியாக ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

மலர் தூவி மரியாதை

மலர் தூவி மரியாதை

இன்று காலையிலேயே மெரினாவிற்கு தனது ஆதரவாளர்களுடன் தீபா சென்றார். பின்னர், அவரது அத்தையான ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

குழந்தைகளுக்கு கேட் ஊட்டி..

குழந்தைகளுக்கு கேட் ஊட்டி..

பின்னர், ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு மதுரைவாயலில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு தீபா சென்றார். அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் ஊட்டி ஜெயலலிதாவின் பிறந்த நாளை தீபா கொண்டாடினார்.

மாலை அறிவிப்பு

மாலை அறிவிப்பு

ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இன்று அவர் தொடங்கியுள்ள பேரவையின் பெயரை தீபா வெளியிட உள்ளார். அப்போது பேரவையின் கொடியும் அறிமுகம் செய்ய உள்ளார் தீபா.

ஓபிஎஸ்ஸுக்கு டிமிக்கி

ஓபிஎஸ்ஸுக்கு டிமிக்கி

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து அரசியலில் பயணிக்க உள்ளேன் என்று கூறிய தீபா, இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது அதற்கு வாய்பில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலை அவரது அரசியல் பயணம் குறித்து விரிவான தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+