ஆர்கே நகரில் போட்டியிட்டு வெல்வேன்.. அசராமல் அடித்து சொல்லும் தீபா
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெல்வேன் என்கிறார் தீபா.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு தாம் வெல்வேன் என சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா.
திருச்சியில் தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு நான் வெற்றி பெறுவேன். அதுவும் ஜெயலலிதா இடத்தில் வெற்றி பெறுவேன்.

டெங்கு விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலற்றதாக இருக்கிறது. இரட்டை இலை விவகாரத்தில் எங்களது மனுவும் பரிசீலலிக்கப்படுகிறது.
மத்திய அரசால்தான் ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துள்ளனர். தினகரனோ மக்களைப் பற்றி எந்த கவலையும்படாமல் தற்போதைய ஆட்சியை கலைக்க வேண்டும் என்கிறார்.
நான் எடப்பாடி அணியில் இணைவேன் என கூறியதே இல்லை. ஆனால் தொண்டர்களும், பொதுமக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படியே செயல்படுவேன்.
இவ்வாறு தீபா கூறினார்.












Click it and Unblock the Notifications