பணச் சிக்கலைத் தவிர்க்க ஆயத்த நிலையில் அரசு இல்லை.. ஒன்இந்தியா சர்வேயில் 59.3% ஆதங்கம்
முன்கூட்டியே புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து தயாராக இருந்திருக்க வேண்டும் என்று ஒன்இந்தியா நடத்திய சர்வேயில் 59.3 சதவீதம் பேர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னை: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பாக கூடுதலாக ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து தயாராக வைத்திருக்க வேண்டாமா என்று ஒன்இந்தியா இணையதளம் வாசகர்களிடம் சர்வே நடத்தியது. அதற்கு 59.3 சதவீதம் பேர் முன்னெச்சரிக்கையாக ரூபாய் நோட்டுக்கள் தயாராக வைத்திருந்திருக்க வேண்டும் என்று தங்களது ஆதங்கத்தைத் வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக 11 கேள்விகளை தயாரித்து ஒன்இந்தியா வாசகர்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. இந்தக் கேள்விகள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளி, குஜராத்தி ஆகிய 8 மொழிகளில் இடம் பெற்றன.

எட்டு மொழிகளில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் 31,198 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் தமிழில் மட்டும் அதிகபட்சமாக 24, 322 வாசகர்கள் பங்கேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பாகவே கூடுதலாக ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து தயாராக வைத்திருக்க வேண்டாமா என்ற கேள்விக்கு, தயாராக இருந்திருக்க வேண்டும் என்று 59.3 சதவீதம் பேர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வெறும் 40.7 சதவீதம் பேர் மட்டுமே தயார் நிலையில் ரூபாய் நோட்டுக்கள் இருக்க வேண்டியதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications