18 உயிரை காவு வாங்கிய டெங்கு: ராஜபாளையத்தில் 20 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜபாளையத்தில் 18 பேரை பலிகொண்ட டெங்கு காய்ச்சலுக்கு, முறையற்ற குடிநீர் விநியோகமே காரணம் என்று சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் டெங்கு கொசுக்கள் எளிதில் உற்பத்தியாவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சலால் சுமார் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். காய்ச்சலின் தீவிரத்தால் சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் ராஜபாளைத்தில் முற்றுகையிட்டனர். மேலும் ராஜபாளையத்தில் டெங்கு பாதிப்பு தீவிரம் ஆனதற்கான காரணத்தை அறிய ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் 20 நாட்களுக்கு மேல் குடிநீரை சேமித்து வைத்ததே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கான முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடிநீர் விநியோகம்

குடிநீர் விநியோகம்

ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் இருந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை வீணாக்காமல் வீட்டின் மேல் உள்ள தொட்டிகள் மற்றும் பாத்திரங்களில் சேமித்து வைத்து பயன்படுத்தியுள்ளனர்.

கொசுக்கள் உற்பத்தி

கொசுக்கள் உற்பத்தி

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி என்ற வகை கொசு சுத்தமான தண்ணீரில்தான் உற்பத்தியாகிறது. அதுவும் 10 நாட்கள் தொடர்ந்து தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசு முழு வளர்ச்சி பெற்றுவிடும். இதுதான் ராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.

குடிநீர் சேமிப்பு

குடிநீர் சேமிப்பு

தற்போது ராஜபாளையம் நகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவே ஆபத்தான ஒன்றுதான். 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகித்தால், மக்களும் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க மாட்டார்கள்.

இதனால் டெங்கு காய்ச்சல் பரவுவதை முழுவதுமாக தடுத்துவிடலாம். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். வீடுகளில் 10 நாட்களுக்கு குடிநீர் சேமித்து வைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

பொதுமக்கள் ஒத்துழைப்பு

வீடுகளில் தண்ணீர் வைத்துள்ள குடங்கள் மற்றும் பாத்திரங்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். தேவையில்லாமல் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். அரசுடன் இணைந்து பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தால் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுத்துவிடலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+