அச்சுறுத்தும் டெங்கு... திருவண்ணாமலையில் 2வயது குழந்தை, மதுரையில் கர்ப்பிணி மரணம்!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இன்றும் 2 வயது குழந்தை மற்றும் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை : தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இன்றும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த 2 வயது குழந்தை மற்றும் மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் டெங்குவிற்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை வாட்டி எடுத்து வருகிறது டெங்கு என்னும் உயிரைக்காவு வாங்கும் காய்ச்சல். நாள்தோறும் குழந்தைகள், பெண்கள் என்று டெங்குவால் ஏற்படும் மரணங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாபேட்டை பகுதியை சேர்ந்த அனிஷ்குமார் என்பவரின் 2 வயது மகன் ஹரிவர்சாந்த் கடந்த 8 நாட்களாக மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஹரிவர்சந்த் சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தார்.

இதே போன்று மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனி மதர்தெரசா பள்ளி ரோட்டில் வசித்து வந்த ராணி என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண் காய்ச்சலுக்கு பலி. 4 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பலனின்றி ராணி உயிரிழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications