மதுரையில் தேவர் சிலைக்கு பொன். ராதாகிருஷ்ணன், மு.க. ஸ்டாலின், வைகோ மாலை அணிவித்து மரியாதை
தேவர் ஜெயந்தியையொட்டி இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மதிமுக பொதுச்செயலாரும் மாலையிட்டு மரியாதை செய்தனர்.
மதுரை: தேவர் ஜெயந்தியான இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மாலையிட்டு மரியாதை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 54வது குருபூஜையும், 109வது ஜெயந்தி விழாவும் நடைபெற்று வருகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆன்மிக விழா நடைபெற்றது. அதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தேவர் நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். சனிக்கிழமை காலை லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இன்று குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுகவின் பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். மேலும், தேவர் ஒரு நேர்மையான அரசியல் தலைவர் என்று வைகோ தெரிவித்தார்.

இதே இடத்தில் பாஜக சார்பில், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் பகுதிக்கு வந்து செல்வதால், ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதாலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications