கனிமொழிக்கு 'சென்னை சங்கமம்'.. தயாநிதி அழகிரி மனைவிக்கு 'வாரச் சந்தை'!
சென்னை: கருணாநிதியின் மகள் கனிமொழி சில ஆண்டுகளாக சென்னை சங்கமம் நிகழச்சி நடத்தியது நினைவிருக்கலாம். அரசியல் காரணங்களால் அந்த நிகழ்ச்சி இப்போது நின்றுபோய்விட்டது.
இப்போது கருணாநிதி பேரன் தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா சென்னையில் வாரச் சந்தை என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கிறார்.

சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் நடக்கும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் பிரபல நிறுவனங்களின் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 60 ஸ்டால்கள் இந்த சந்தையில் போடப்படுகின்றன.
பெங்களூர், கோவா, டெல்லி போன்ற நகரங்களிலிருந்து பல நிறுவனங்கள் இந்த சந்தையில் பங்கேற்கின்றன. இந்த வாரச் சந்தை தொடர்ந்து நடக்கப் போகிறதாம்.

இந்த சந்தைக்கு அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக ஸ்ரீவெங்கட் என்ற இளைஞரை நியமித்துள்ளார். 12-ம் வகுப்பு மாணவனான இந்த வெங்கட், பிரபல ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் மகன். இந்த வாரச் சந்தையில் புகைப்பட போட்டியும் இடம்பெறுகிறது.

இந்த வாரச் சந்தை நிகழ்ச்சியின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பூர்ணா, கருணாநிதியின் இன்னொரு பேரன் அருள்நிதி ஆகியோர் பங்கேற்றனர். தயாநிதி அழகிரியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications