ஸ்பெக்ட்ரம்: பிரதமரை மீறி அதிகாரம் செலுத்தவில்லை- ஆ.ராசா
சென்னை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமரை மீறி எதையும் செய்யவில்லை என்று முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
நான் எப்படி பிரதமரை மீறி செயல்பட முடியும். தேசிய தொலைதொடர்பு கொள்கை என்ற ஒன்று உள்ளது. அதன் நோக்கமே சாமானிய மக்களுக்கும் தகவல் தொடர்பு துறையின் பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

நானும் சட்டம் பயின்றுள்ளேன். எனவே அந்த அறிவின் அடிப்படையில் கூறுகிறேன், பிரதமரே நினைத்தாலும் தொலைதொடர்பு கொள்கைக்கு எதிராக எந்த முடிவையும் எடுக்க முடியாது. பிரதமர் பதவி நாடாளுமன்றத்தை விட உயர்ந்த அதிகாரம் படைத்தது கிடையாது.
எனவேதான், அமைச்சரவையை கூட்டி, தொலைதொடர்பு கொள்கையை மாற்றம் செய்து அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமரை நான் வலியுறுத்தினேன். ஆனால் சில டெலிகாம் நிறுவனங்கள் இம்மாற்றத்தை விரும்பவில்லை. தகவல் தொடர்பு துறையில் புரட்சி செய்வதை சில சக்திகள் விரும்பவில்லை.
அந்த சக்திகள் பிரதமருக்கு கடிதம் எழுதின. இந்த விவகாரத்தில் மன்மோகன்சிங் மவுனம் காத்தார். ஏனெனில் அவருக்கு தொலைதொடர்பு கொள்கை குறித்து தெரியாது. இவ்வாறு ராஜா கூறியுள்ளார்.
ரதமரின் ஊடக ஆலோசகராக பதவி வகித்த சஞ்சய் பாரு எழுதிய 'விபத்தாக வந்த பிரதமர்' என்ற புத்தகத்தில் பிரதமரை மீறி ராசா செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications