தினகரனுக்கு திகார் சிறை நிலாச்சோறு - பூஞ்சோலை: நாஞ்சில் சம்பத் குபீர்!
தினகரன் சிறையில் சிரித்துக்கொண்டுதான் உள்ளார். அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை அவர் சட்டபடி எதிர்கொண்டு வெற்றி பெறுவார் என மதுரையில் நாஞ்சில்சம்பத் கூறியுள்ளார்.
மதுரை: தினகரன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை அவர் தைரியமாக சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவார் என அதிமுக தினகரன் கோஷ்டி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தினகரன் கோஷ்டி ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ சாமி,கர்நாடக அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி ஆகியோர் கண்டனக் கூட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில்சம்பத்,'' தினகரனுக்கு சிறை என்பது நிலாச் சோறு. அங்கு அவர் சிரித்தபடிதான் இருக்கிறார். அடக்குமுறை, ஆபத்து, அறைகூவல் அனைத்தையும் எதிர்கொண்டுதான் ஒரு தலைவன் உருவாகுவான். அப்படியான தலைவராக தினகரன் இருக்கிறார்.
அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை அவர் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொண்டு வெற்றி பெறுவார். தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்காது'' எனக் கூறினார்.
தினகரன் இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான நாளில் இருந்து தினகரனுக்காக நாஞ்சில் சம்பத் ஆவேசமாகக் குரல் கொடுத்து வருகிறார்.
இதற்காக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அவர் மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட போதும் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தினகரனுக்காக பேசி வருகிறார். தினகரனுக்காக பொதுவெளியில் பேசும் ஒரே குரலாக அவர் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications