இரட்டை இலை விவகாரம்: ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரிய தினகரன் மனு டிஸ்மிஸ்!
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரிய தினகரன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Recommended Video

மதுரை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அக்டோபர் 31-ந் தேதிக்குள் இரட்டை இலை சின்ன வழக்கை முடிவுக்கு கொண்டுவர உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து செப்டம்பர் 29-க்குள் அனைத்து தரப்பும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்தது. ஆனால் தினகரன் தரப்பு ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டது. இதை தேர்தல் ஆணையம் நிராகரித்ததுடன் அக்டோபர் 6-ந் தேதி முதல் விசாரணை தொடங்கும் என அறிவித்தது.
இந்நிலையில் தங்களுக்கு கூடுதல் அவகாசம் தரக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தரப்பு மனு தாக்கல் செய்தது. அதில் 4 மாத கால அவகாசத்தை தினகரன் தரப்பு கோரியிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் பெஞ்ச் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.
இன்று பிற்பகல் தீர்ப்பளித்த நீதிபதிகள், தினகரன் தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.
-
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications