ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற ஆசைப்படுகிறார் தினகரன் - சசிகலா புஷ்பா பரபர பேச்சு: வீடியோ
தினகரன் கட்சியையும் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற நினைக்கிறார் என சசிகலா புஷ்பா எம்.பி தினகரன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை: தமிழகத்தில் ஆட்சியையும் அதிமுக கட்சியையும் கைப்பற்ற ஆசைப்படுகிறார் தினகரன் என சசிகலா புஷ்பா எம்.பி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா புஷ்பா எம்.பி சசிகலா குறித்தும் தினகரன் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, தினகரன் ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற நினைக்கிறார். அதனால் தான் கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் என கூறியவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கட்சியில் தலையிடுவேன் என கூறுகிறார்.
அமைச்சர்களும் எம்.எல்.ஏக்கலூம் தங்கள் 4 வருட பதவியை தக்கவைத்துக்கொள்ள முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகின்றனர். தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டோம் என்றனர். இப்போது அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் ஒதுக்கி வைத்தவரை சந்திக்கிறார்கள்.
அதேபோல் சசிகலாவை தூக்கி எறிந்துவிட்டோம் என கூறினார்கள். இப்படி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் மாற்றி மாற்றி கருத்துக் கூறி வருவதால் வெளியில் உள்ளவர்கள் தமிழகத்தை வேடிக்கையாகப் பார்க்கின்றனர். ஆனால் மக்கள் இவர்களை நம்பத் தயாராக இல்லை என சசிகலா புஷ்பா எம்.பி கூறினார்.