'பலே பாண்டியா'... திண்டுக்கல்லில் மெடிக்கல் லீவ் போட்டு கொள்ளையடித்த 'இன்ஸ்பெக்டர்' கைது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நெடுஞ்சாலையில் கார்களை வழிமறித்து கொள்ளையடித்த திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியன் 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவர் மீது பல புகார்கள் வந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் திண்டுக்கல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

Dindigul Police Inspector arrested for robbery

இவர் அண்மையில் பழனி கீரனூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் கீரனூரில் சார்ஜ் எடுக்காமல் மெடிக்கல் லீவில் சென்றுவிட்டார் கோபிநாத் பாண்டியன். ஆனால் மெடிக்கல் லீவில் போவதாக கூறிவிட்டு தொடர் கொள்ளைகளில் கோபிநாத் பாண்டியன் ஈடுபட்டு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையை சேர்ந்த சிகரெட் மொத்த டீலரான சிவபெருமாளிடம் கடந்த ஜனவரி மாதம் கொடைரோடு டோல்கேட் அருகே இன்ஸ்பெக்டர் என கூறி மர்ம ஆசாமி ஒருவர் ரூ1 லட்சத்தை பறித்துள்ளார். அதே சிவபெருமாள் கொண்டு சென்ற ரூ37 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களை போலீசார் எனக் கூறி ஒரு கும்பல் கடந்த 12-ந் தேதி கடத்திச் சென்றது. அத்துடன் சிவபெருமாளிடம் இருந்த ரூ2 லட்சம் பணத்தையும் அக்கும்பல் பறித்துச் சென்றது.

இச்சம்பவங்கள் தொடர்பாக திண்டுக்கல் தாடிக்கொம்பு மற்றும் அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டோல்கேட் கொள்ளையில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியனின் கார் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.

தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் டோல்கேட் கொள்ளை, சிகரெட் பண்டல் கொள்ளை ஆகியவற்றில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியனுக்கு நேரடியாக தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன கொடுமை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+