திருவிழாவில் பிள்ளையை ஏமாற்றியது போல ஆர்கே நகர் தேர்தல்... திண்டுக்கல் சீனிவாசன் புதுக்கதை!
திருவிழாவில் பிள்ளைகளை ஏமாற்றியது போல ஆர்கே நகர் தேர்தல் நடந்திருப்பதாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
Recommended Video

திண்டுக்கல் : ஆர்கே நகர் தேர்தலில் மக்களை ஏமாற்றி தினகரன் வெற்றி பெற்றுள்ளார், தொகுதிக்கு செல்லும் தினகரன் ஆட்களிடம் ரூ. 20 பணத்தை கொடுத்து ரூ. 10 ஆயிரம் மக்கள் வெளிப்படையாகவே கேட்கின்றனர். வாக்காளர்கள் அனைவரும் தினகரனுக்கு எதிராக போராடத் தயாராகி வருவதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
திண்டுக்கல் மணிக்கூட்டு அருகே அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு அந்தக் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது : ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆகிறது. ஒன்றரை வருடமாக நல்லமுறையில் மக்கள் பாராட்டும் வகையில் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என ஸ்டாலின் பினாமியான டிடிவி கூறி வருகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நேற்றுக்கூட அந்தப் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல போனபோது 20 ரூபாய் நோட்டு கொடுத்து 10ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி இன்னும் பணம் தரவில்லை என மக்கள் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்கள்.
திருவிழாவில் பிள்ளையை ஏமாற்றியது போல் நடந்திருக்கிற ஆர்கே நகர் தேர்தல். இதனால் அந்தப் பகுதியில் உள்ள வாக்காள மக்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூட தயாராக உள்ளனர். தற்போது முத்தலாக் கட்சி பயணம், மானிய பயணம் ரத்து போன்ற பிரச்சனைகளை மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications