For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவினாசியில் தீண்டாமை கொடுமை... சாதி என்பது விதியா... பா. ரஞ்சித் கொதிப்பு

அவினாசியில் தீண்டாமை கொடுமை நடந்ததை அடுத்து அங்கு சமையலராக உள்ளவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ததை பா ரஞ்சித் கண்டித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அவினாசியில் தீண்டாமை கொடுமையால் அங்குள்ள சமையலரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்த அவலத்தை இயக்குநர் பா.ரஞ்சித் கண்டித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் திருமலைக்கவுண்டம்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சமையலராக பாப்பம்மாள் என்பவர் சமையலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Director Pa.Ranjith tweet about Anganwadi cook transfer incident

இவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு ஜாதியை சேர்ந்தோர் பாப்பம்மாள் சமைத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பள்ளி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேறு ஒருவரை நியமித்து சத்துணவு சமைக்க வைத்துள்ளனர். இதையடுத்து பாப்பம்மாளை அவினாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு தமிழகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் பா ரஞ்சித் கூறுகையில் #சாதிஎன்பதுவிதி??? அப்படியா..?? இவுங்க அழுகைக்கு பரிதாபம்லாம் பட வேணாம்..திரும்பவும் அந்த பள்ளிகூடத்தலதான் சமைக்கனும்.. என்ன பன்னலாம் சொல்லுங்க ???? இவுங்கள இடமாற்றம் செய்த அரசு அதிகாரிய என்ன பன்ன போறோம்???? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Director Pa.Ranjith tweet about Anganwadi cook transfer incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X